Wednesday, October 19, 2011

மாதிரி வினாக்கள்

1) 1. இலக்கப் பிரிப்பு (Digital Divide) என்பதனால் யாது விளங்கிக் கொள்கிறீர்?


2. இலக்கப் பிரிப்பு என்பதனை வெற்றி கொள்வதற்கு அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய முறையான நடவடிக்கைகளை உமது சொந்க மொழிநடையில் எழுதுக?




2)


1. இலக்கப் பிரிப்பு ஏற்படுவதற்கான பிரதான காரணம் என்ன?


2. இலக்கப் பிரிப்பால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கூடிய நடவடிக்கைகள் என நீர் கருதுவனவற்றை விளக்குக.




3) இலங்கையின் கிராமப்புறங்களிற்கு தகவல் தொழில்நுட்பத்தை கொண்டு செல்வதற்கு தடையாக உள்ள காரணிகள் 5 இனை கலங்துரையாடுக.




4) தகவல்தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் அனுகூலங்களை கிராமப்புற மக்கள் பயன்படுத்த முடியாமைக்கான காரணங்கள் 5 இனை இனங்காண்க.?




5)


1) ஒருவர் வழமையாக நீண்டநேரம் கணினியைப் பயன்படுத்துவதால் ஏற்படத்தக்க சுகாதாரப் பிரச்சினைகள் இரண்டினை விளக்குக.


2) தரவு மறைகுறியாக்கம் (Data encryption) என்பதால் கருதப்படுவது யாது என விளக்குக.


3) பாடசாலைப் பிள்ளைகளின் தகவல், தொடர்பாடல் தொழிநுட்பவியல் அறிவை மேம்படுத்துவதற்காக இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் மூன்று தொடக்க முயற்சிகளை விளக்குக.




6)


1) கல்வித்துறையில் தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் பயன்படும் மூன்று சந்தர்ப்பங்களைக் குறிப்பிட்டு அவற்றைச் சுருக்கமாக விளக்குக.


2) தகவல் தொழிநுட்பவியலைப் பயன்படுத்திப் பொதுமக்களுக்குச் சேவைகளை வழங்கும் இரு அரசாங்க நிறுவனங்களை எழுதுக


3) தகவல் தொழிநுட்வியல் துறையில் மூன்று தொழில் வாய்ப்புக்களைக் குறிப்பிட்டு அவை ஒவ்வொன்றினதும் பணி விபரங்களைச் சுருக்கமாக விபரிக்க.


4) தகவல் தொடர்பாடல் தொழிநுட்பவியலின் பயன்பாட்டினால் உருவாக்கப்படும் மூன்று விவாதவிடயங்களைக் (issues) குறிப்பிடுக.




7)


1) தகவல், தொடர்பாடல் தொழிநுட்பவியல் (ict) துறையில் உள்ள மூன்று தொழில் வாய்ப்புகளை இனங்கண்டு, அவை ஒவ்வொன்றினதும் கொள்பணிகளை (job task) சுருக்கமாக விபரிக்க.


2) ict துறையில் உள்ள இரு ஒழுங்காற்றியல் விவாதவிடயங்களை (Ethical issuess) சுருக்கமாக விளக்குக. உமது விடையில் குறிப்பிட்ட ஒழுங்காற்றியல் விவாதவிடயம் ஒவ்வொன்றுக்கும் ஒர் உதாரணம் இடம்பெற வேண்டும்.


3) பிழையான நிலைப்பாடுடன் (Posture) கணினிகளைப் பயன்படுத்துவதனால் ஏற்படத்தக்க இரு உடல் நல விளைவுகளைச் சுருக்கமாக விளக்குக.


4) முறைவழியாக்கியின் கதி (Processor Speed), நினைவகக் கொள்திறன் (Memory Capacity) போன்ற கணினி விபரக்கூற்றுகள், தனியாள் கணினியைத் தெரிந்தெடுப்பதில் முக்கியத்துவம் வாய்ந்த காரணிகளாகும். வீட்டுத்தேவைக்காக ஒருதனியாள் கணினியை வாங்கும் போது நீர் கருத்தில்கொள்ளும் இருவேறு காரணிகளைச் சுருக்கமாக விபரிக்குக.


5) பின்வரும் துறைகளில் எவையேனும் இரண்டின் ஒவ்வொரு ict பிரயோகத்தை விளக்குக.




(i) கல்வி (ii) சுகாதாரம் (iii) வியாபாரம்




8)


உமது பெற்றோர் உமக்காக ஒரு புதிய மேசைக்கணினியை (Desktop Computer) வாங்கியுள்ளதாக கற்பனை செய்க. பெற்றோர் உமது கணினிக்கு இணையத் தொடுப்பை ஏற்பாடு செய்யவுள்ளனர்.




1. உமது கணினியை இணையத்துடன் தொடுக்கும்போது நீர் எதிர்நோக்கத்தக்க இருசாத்தியமான அச்சுறுத்தல்களைச் சுருக்கமாக விபரிக்குக


2. அத்தகைய அச்சுறுத்தல்களிலிருந்து கணினியைப் பாதுகாக்கும் இருமுறைகளை விபரிக்குக.


3. இக்கணினியைப் பயன்படுத்தும்போது எழத்தக்க சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு நீர் கருத்தில் கொள்ளும் மூன்று காரணிகளை சுருக்கமாக விளக்குக.


உமது நண்பர் தனது பயன்பாட்டிற்காக கொள்வனவு செய்த கணினி விளையாட்டு மென்பொருளின் ஒருபிரதியை உம்மிடம் வழங்கியுள்ளார் என கற்பனை செய்க. உமது புதிய கணினியில் இம்மென்பொருளை நிறுவிப் பயன்படுத்தல் உகந்தது என நீர் கருதுகிறீரா? உமது விடைக்கான காரணங்களை விளக்குக.




9)


1) தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பவியலிலிருந்து (ict) சுகாதாரத்துறை எங்ஙனம் நன்மையைப் பெற்றுள்ளது என்பதை இரு உதாரணப் பிரயோகங்களைப் பயன்படுத்தி விளக்குக.


2) கற்றல் - கற்பித்தல் செயல்முறையில் ict ஐ எங்ஙனம் பயன்படுத்தலாமென விவரிக்க. உமது விடையில் கல்விப் பிரயோகங்களின் இரு உதாரணங்கள் இடம்பெற வேண்டும்.


3) இலங்கையில் ict ஐ பயன்படுத்தி விவசாயத்தை எங்ஙனம் மேம்படுத்தலாம் என்பதை விளக்குக. மூன்று உதாரணங்கள் தருக.


4) இணையத்தின் நன்மையைப் பெறுவதில் இலங்கை மக்கள் எதிர்நோக்கத்தக்க மூன்று தடைகளை விளக்குக.




10)


கணினிப் பயனர் ஒருவரால் ஒழுங்கின்றி வைக்கப்பட்டுள்ள வேலைச் சூழலொன்று படத்தில் காட்டப்பட்டுள்ளது. அதனை அவதானித்து கீழே வினவப்பட்ட வினாக்களுக்கு விடை தருக.


1. இப்பயனரின் சுகாதாரத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தத்தக்க மூன்று காரணிகளை எழுதுக.


2. இப்பயனரின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தத்தக்க பாதகமான மூன்று காரணிகளை எழுதுக


3. நீங்கள் இனங்கண்ட சுகாதாரத்திற்கு பாதகமான மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலைமைகளைத் தவிற்பதற்காக எடுக்கக் கூடிய நடவடிக்கைகளை குறிப்பிடுக.




11) பின்வருவனவற்றுள் மூன்று தலைப்புகள் பற்றிச் சுருக்க விபரங்களை எழுதுக.


1. க,பொ.த உயர்தரத்தில் ஒருபாடமாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம் (ICT) உள்ளடக்கப் பட்டுள்ளமை


2. பாடசாலையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பப் பாடத்தைப் பயிலுகையில் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அறைகூவல்களும்.


3. இலங்கையில் உல்லாசப்பயணத்துறை மேம்பாட்டிற்காக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தல்


4. மோட்டார் வாகன பதிவுச்சான்றிதழ் வழங்கும் செயன்முறையைக் கணினி மயப்படுத்துவதனால் கிடைக்கும் பிரதிபலன்கள்.




12) தொழிநுட்ப அபிவிருத்திகாரணமாக வர்த்தக உலகு தொடர்ந்தும் வளம் பெற்று வருகின்றது. நவீன, முன்னணித் தொழிநுட்பங்களுள் ஒன்றாகிய இணையத் தொழிநுட்பத்தினுடாகச் செயற்படும் உலகளாவிய வலையமைப்பைப் (World wide web) பயன்படுத்தி சவால்கள் மிக்க உலகை இலகுவாக வெற்றி கொள்ளக் கூடிய விதம் பற்றி வர்த்தக சமூகம் அறிவூட்டம் பெற்றுள்ளது. கடந்த காலங்களில் போன்றல்லாது இன்று உலகெங்கும் பரந்து காணப்படும் சேவை பெறுநர்களுக்கு சேவை வழங்குவதற்காகச் சில்லறை வியாபாரத் தளங்கள் கூட இன்று வலைக்கட்டமைப்பினை (Web Site) நடத்தி வருகின்றன. e-mark என்பது மேலே விபரிக்கப்பட்ட நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி தனது வர்த்தகத்தைப் பிரபல்யப்படுத்த எதிர்பார்க்கும் ஒரு சில்லறை வியாபாரத் தளமாகும்.


1. வலைக் கடப்பிடம் ஒன்றை நடத்தி வருவதால் e-mark வணிக முயற்சி பெறத்தக்க இரண்டு பிரதிபலன்களைத் தருக.


2. அவர்களது வலைக்கடப்பிடம் மூலம் வாடிக்கையாளருக்கு வழங்கக் கூடிய தகவல்களைக் குறிப்பிடுக.


3. மேற்படி வலைக் கடப்பிடத்தை கவர்ச்சிகரமானதாக ஆக்கிக் கொள்வதற்காக அதில் சேர்க்கக் கூடிய இரண்டு சிறப்பம்சங்களைக் குறிப்பிடுக.


4. பொது மக்களுக்கு e-mark தொடர்பாக அறிவூட்டம் செய்வதற்காகக் கையாளக்கூடிய இரண்டு உத்திகளைத் தருக.




13) பின்வருவன மூன்று பற்றிச் சுருக்கக் குறிப்பு எழுதுக


1. இலங்கையில் இளம் சந்ததியினர் மீது தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தின் செல்வாக்கு.


2. கணினி விளையாட்டுகளின் பிரதிகூலங்கள்


3. செல்லிடத் தொலைபேசிப் (Cellphone) பாவனையினால் ஏற்படக் கூடிய சுகாதாரம் பிரச்சினைகள்


4. இலங்கையில் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்காக தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தை பயன் படுத்துதல்.




14)


1) e-srilanka வேலைத்திட்டத்தின் நோக்கங்களைத் தருக.


2) வங்கித்துறையில் பயன்படும் தகவல் தொழிநுட்ப சாதனங்களை பட்டியலிடுக.


3) வங்கித்துறையில் தகவல் தொழிநுட்பத்தின் பயன்பாட்டை விளக்குக.




15)


1) 'கல்வித்துறையில் தகவல் தொழிநுட்பம்' என்பதுபற்றி உமது சொந்த மொழிநடையில் சிறுகுறிப்பு எழுதுக.?


2) 'கற்றல் முகாமைத்துவ முறைமை' (Learning Managmemet System) என்பதனை விளக்குக.




16. பின்வருவனவற்றிற்கு சிறுகுறிப்பு எழுதுக.


1. தீமை பயக்கும் கணினி மென்பொருட்கள்


2. கிராமிய பொருளாதாரத்தை கட்டிஎழுப்புவதில் ICT இன் பங்களிப்பு


3. கணினி பயனர் ஒழுக்கம் (Computer Ethics)


4. மென் பொருள் திருடப்படல்


5. வைத்தியத்துறையும்; தகவல் தொடர்பாடல் தொழிநுட்பமும்




17. பின்வரும் தலைப்புகளுக்கு சிறு குறிப்பு எழுதுக.


1. கற்கும் சாதனம் என்ற வகையில் ஒரு கணினியின் பயன்பாடு;


2. தொடர்ச்சியான கணினிப்பாவனையால் உடல் நலத்திற்கு ஏற்படும் தீங்குகள்


3. இணையத்தில் துஷ்பிரயோகம்.




18. பின்வரும் தலைப்புகளுக்கு சிறு குறிப்பு எழுதுக.


1. கற்கைகளுக்கு தனியாள் கணினியை பயன்படுத்தல்


2. பாரம்பரிய அஞ்சலுக்கு மேலாக மின்னஞ்சலின் அனுகூலம்


3. இணையத்தின் பிரதிகூலங்கள்


4. ICT யைப் பயன்படுத்தி இலங்கை ஊழியர் படையின் திறனை மேம்படுத்துதல்.

வேலைத்தளத்தை பொருத்தமானவாறு அமைத்துக்கொள்ளல்

பூரணமான உலகத்தில் நன்கு ஒளியூட்டப்பட்ட அறையில் உங்கள் மிகவும் சௌகரியமானதும் ஆதாரம் மிக்கதுமான கதிரையில் அமர்ந்து பெரிய திரையுள்ள கணினியில் நீங்கள் வேலை செய்ய வேண்டும். உண்மையில் நீங்கள் ஒருவரிடமிருந்து உங்களுக்குக் கையளிக்கப்பட்ட உங்களுக்குரியதைவிட ஆறு அங்குலங்கள் உயரமான அல்லது குறுகிய ஒரு அலுவலகக் கதிரையிலிருந்து கொண்டு தெளிவற்ற சிறிய கணினித் திரையை சரிவாகப் பார்த்துக்கொண்டே பணிபுரிய வேண்டியிருக்கிறது. கதிரை, மேசை, மவுஸ், மொனிட்டர் மற்றும் வெளிச்சம் ஆகிய-16-அநேகமான ஆரோக்கியமான வேலைத்தலத்திற்குரிய அத்தியாவசியப் பொருட்கள் வேண்டுமெனத் தெரிந்து தரப்பட்டபொழுது அவைகளை மேலும் பயனாளிகளுக்கு உதவும் வகையில் செய்வதற்கு முடியுமென்பது தெளிவு. அதற்கான வெளிப்பாடுகளாவன:


 மொனிட்டரிலிருந்து உங்கள் தலை 18 முதல் 30 அங்குலங்கள் தள்ளி இருக்க வேண்டும்.

 சாவிப் பலiகையை முழங்கையின் உயரத்தில் உங்கள் கரங்களை நேரே வைத்து செயற்படும் வகையிலான தூரத்திலும் கோணத்திலும் வைத்திருக்க வேண்டும்.

 கதிரைக்குக் கைகள் இல்லாவிட்டால் உங்கள் கைகளுக்கு ஆதாரமளிக்கும் வகையில் தலையணையை உபயோகிக்க.

 உங்கள் பாதங்கள் மட்டமாக நிலத்தில் வைத்திருக்கும் வகையிலும் இடுப்பு முழங்கால் மட்டத்திற்குச் சற்று உயரத்தில் இருக்கும் வகையிலும் கதிரையைச் சரிப்படுத்துக.



ஒரு குறிப்பிட்ட வயதை அணுகிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு ஒரு விசேட அறிவிப்பொன்று உள்ளது. சில வகை மூக்குக்கண்ணாடிகள் அணிந்தவர்கள் அவற்றின் கீழ்ப்பக்கக் கண்ணாடிகளுக் கூடாகப் பார்த்து வாசிபபதற்கேதுவாக அடிக்கடி தலையைப் பின்பக்கமாகச் சாய்ப்பது வழக்கம். இது கழுத்து, தோள் மற்றும் முதுகு என்பவற்றில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். வியாதிக்கட்டுப்பாட்டு மையங்கள், உங்கள் மொனிட்டரைத் தாழ்த்தி வைத்து விசேடமாக கணினி வேலைக்கென வடிவமைக்கப்பட்ட கண்ணாடிகளைப் பயன்படுத்துமாறு சிபரிசு செய்கின்றது.


கணினி வேலைக்கான முறையாக இருக்கும் நுட்பங்கள்


 உங்கள் பாதங்களை நிலத்தில் மட்டமாக வைத்திருக்க.

 கூன்விழுந்து உட்காராது நிமிர்ந்து உட்காருக.

 தலையை நடுநிலைத்தானத்தில் வைத்திருக்க.


நல்ல குருதியோட்ட நிலையை நிலைப்படுத்திக்கொள்ள அடிக்கடி உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளுங்கள். ஒரு பிரதேசத்தை மற்றும் களைப்படையச் செய்வதைத் தவிர்க்க. வேலைசெய்யும் பொழுது புத்தகங்களையோ அச்சிட்ட ஆவணங்களையோ பார்க்கவேண்டி ஏற்படின் அவற்றைப் பார்ப்பதற்கு சுழன்று திரும்புவதற்குப் பதிலாக அவற்றை உங்களுக்கு அண்மையில் முன்னால் வைத்துக்கொள்க. நீங்கள் வேலை செய்யும்போது உங்கள் தோளுக்கும் தாடைக்குமிடையில் தொலைபேசியை வைத்துக்கொண்டு கதைப்பீரா? இதனால் எந்த நன்மையும் வரப்போவதில்லை. நீங்கள் உரையாடிக் கொண்டு வேலை செய்ய வேண்டுமானால் ஒலிபெருக்கியுடனான தொலைபேசியை அல்லது பாரங்குறைந்த தலையிலணியும் நுண்ஒலிபெருக்கிச் சாதனத்தை வாங்கி உபயோகிக்க.


இயக்குபவரின் பயிற்சிகள்


நீங்கள் பரிபூரணமான மனித இயக்கவியல் ஒழுங்குபாடுகளையும் இருக்கும் விதத்தையும் கடைப்பிடித்த பொழுதிலும் நீங்கள் அடிக்கடி வேலையை இடைநிறுத்தம் செய்ய வேண்டியுள்ளது. 'செய்ததையே செய்யும் நிலையான வேலை' அதாவது கணினியை உபயோகிப்பது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் களைப்பைத் தரவல்லது. (பௌதிகரீதியான செயற்பாடுகளிலிருந்து பெறும் களைப்புப் போன்ற 'நல்ல களைப்பு' அல்ல இது) கணினியை நிறுத்தாமலே உங்கள் பணிக்குச் சற்று இடைநிறுத்தம் தரலாம். நாளின் கடைசி மணித்துளி வரைக்கும் எல்லாக் கோவைப் படுத்தலையும் விட்டு வைப்பதற்குப் பதிலாக 15 நிமிடத்துண்டு இடைவேளைகளுடன் பணிபுரிவது நன்று. தொலைபேசி அழைப்புகள் எடுக்கும் விடயத்திலும் இது போன்றே செயற்படுக. சில நிபுணர்கள் ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் மூன்று நிமிட பணி இடை நிறுத்தம்தேவையென்று சிபாரிசு சய்கின்றனர். அத்தோடு கூட இந்த நலமிக்க உலகத்தில் உள்ள எங்களைப் போன்றவர்கள் ஒரு நாளைக்கு பல தடவைகள் இடைநிறுத்தம் செய்ய வேண்டுமென்று சிபாரிசு செய்கிறார்கள். இருதயத்தைப் போன்ற பெரிய தசைகளை இழுத்து மற்றும் பயன்படுத்த இது உதவும். ஐந்து நிமிட நடையானது உங்களை ஆரோக்கியமானவராகவும் சுறுசுறுப்பானவராகவும் ஆக்கும். உங்களது வேலையில் புத்துணர்ச்சியோடு ஈடுபட ஆயத்தமாவதற்கு இது உதவும்.


கணினி வேலையில் அடிக்கடி முதன்மையாகத்தாக்குதலுக்குள்ளாகும் உடம்பின் பாகங்களாவன: கண்கள், முதுகு மற்றும் கைகளாகும். சில அவசர ஆலோசனைகளாவன:


 உங்கள் கண்கள் உலர்ந்து விடாதபடி அடிக்கடி கண் சிமிட்டுக.

 ஒவ்வொரு முறையும் மொனிட்டர் திரையைச் சுத்தமாக்குக. அதனால் திரையில் படியும் தூசுப் படலத்திற்கூடாக நீங்கள் உற்றுப்பார்க்கும் நிலை ஏற்படாது. இந்தத் தூசுப் படலம் திரையில் ஏற்படும் நிலை மின்னின் விநோதமான சக்தியினால் அங்கு ஏற்படுகின்றது.

 ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் கண்களைக் கணினிக்கு வெளியே குறைந்தது 10 அடிகளுக்கப்பால் உள்ள பொருட்களைக் குறித்துக் குவித்து நோக்குக.

 நேராக அமர்ந்து கொண்டே உங்கள் தோளின் பின்புறத்தைப் பார்ப்பதனால் கழுத்து விகாரத்தைத் தளர்த்துக.

 தோள்களை பின்பக்கமாகவும் முன்பக்கமாகவும் உருட்டுவதன் மூலம் அவற்றைத் தளர்வுறச் செய்க.

 கைவிரல்களை அகலமாக விரிப்பதன் மூலமாக உங்கள் கைகளிலுள்ள தசை இழுவையைக் குறைக்குக.

 கைமுஷ்டியை இறுக்கியபடி பிடித்துக்கொள்க.

ICT இல் இயல்பாயமைந்த சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள்

கணினியொன்றை உபயோகிப்பது உங்கள் விரல்கள், கைகள், மணிக்கட்டுகள், கரங்கள்,தோள்கள், கழுத்து, முதுகு மற்றும் கண்கள் போன்ற உங்கள் உடலின் உறுப்புகளைப் பாதிக்கக்கூடும். பார்வைக்குக் கணினிகள் போதுமான பாதுகாப்புடையன போன்று தெரிந்தாலும் சில ஆபத்து;கள் உள்ளன என்பதைத் தெரிந்து கொள்வது நல்லது. அவற்றை இயலுமானவரை குறைத்துக் கொள்ளுதல் வேண்டும். கணினியில் பணி புரியும்போது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சில ஆலோசனைகள் பற்றி வாசிக்க.

சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள்

கணினிப் பழக்க வழக்கங்கள் சுகாதாரத்த்தின் மீது தாக்கம் செலுத்தும் தொடர்ச்சியாக நீண்டநேரம் கணினிகளை உபயோகிப்பது உங்கள் உடலில் சில கோளாறுகளை உண்டுபண்ணும். அவற்றுள் சில:


 கண்வலி

 முதுகுவலி

 சௌகரியக் குறைவு

 மூளையில் கட்டிகள்


போன்றன.


Firewall

ஒரு firewall என்பது அதிகாரபூர்வமற்ற பாவனைகள் உங்கள் கணினிக்குள் செல்ல வழி வகுப்பதைத் தடுக்கும் ஒரு தொகுதியாகும். ஒரு firewall வன்பொருளாகவோ அல்லது மென்பொருளாகவோ இருக்க முடியும். வன்பொருள் firewalls வெளியுலகத்திலிருந்து வருகின்ற அநேக உருவில் உள்ள தாக்குதல்களுக்கும் வலிமைமிகுந்த பாதுகாப்பை வழங்கவல்லதாகும். இதனை ஒரு தனித்து நிற்கும் ஆக்கப் பொருளாக அல்லது அகலப்பட்டை வழிகாட்டியாகப் பெற்றுக் கொள்ளலாம். துரதிஷ்டவசமாக வைரசுகளுடன் கிருமிகளுடன் மற்றும் Trojan உடன் போரிடும்பொழுது ஒரு வன்பொருள் firewall ஆனது மென்பொருள் firewall ஐ விட திறன் குறைந்ததாகவே இருக்கிறது. வெளிச்செல்லும் ஈ தபால்களில் அது பதியப்பட்ட கிருமிகளைப் பெரும்பாலும் கவனிக்காமல் விடுவதுடன் இது ஒழுங்கான வலைவேலைப் பயணமாகவே காண்கிறது. தனித்தனியான வீட்டுப் பாவனையாளர்களுக்கு மிகப் பிரபல்யமான firewall தெரிவானது ஒரு மென்பொருள் firewall ஆகும். ஒரு சிறந்த மென்பொருள் firewall ஆனது உங்கள் கணினியைக் கட்டுப்படுத்துவதற்காக வெளித்தாக்க முயற்சிகளிலிருந்து பாதுகாக்கிறது.