Monday, October 17, 2011

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) ஆனது பின்வரும் சமூகச்செயற்பாடுகளில்ஃதுறைகளில் பிரதான பங்களிப்பைச் செய்துள்ளது.

கற்பித்தலில்


தொலைதூர கூட்டுச் செயல்களுக்கு அனுகூலமான கணினி ஊடகம் சார்ந்த வலை வேலைகளினூடாக ஆசிரியர் தொழில் வாண்மை அபிவிருத்திக்கு ஆதாரமாக இருக்கிறது. தொழில்நுட்பத்தை உபயோகித்து வலிதாக்கி மனப்பாடம் செய்யும் அடிப்படையிலான கற்பித்தல் நடைமுறைகளை உடைத்தெறிந்து பெரும்பாலும் மாணவர் மையமாக்கப்பட்ட கற்றிலின்பால் கல்விச் சீர்திருத்தம் மேற்கொள்ள ஆதாரமாயுள்ளது. வகுப்பறைகளில் கணினிகளை உபயோகித்து பிந்திய பாடப் புத்தகங்கள் மற்றும் கற்பித்தல் கோவைகளை உடன்வரும் வழிவகைகளினூடாகப் பெற்றுக் கொள்ளலாம்.


கற்றலில்


உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள மாணவர்களுடன் கூட்டான செயற்பாடுகளை மாணவர்கள் முன்னேற்றமாக மேற்கொள்வதற்காக வலைவேலைகளை விருத்தி செய்தல். மாணவர்களுக்குக் கற்றல் உள்ளடக்கம் மற்றும் மூலவளங்களை வழங்குவதற்கும் முகாமைப்படுத்துவதற்கும் ஏதுவான வழக்கமாக ஒரு பெரிய அளவிலுள்ள (அந்த அளவீடு மிக விரைவாகக் குறைந்து கொண்டு வருகிறது.) ஒரு மென்பொருள் பொதியாக கற்றல் முகாமைத்துவத் தொகுதி (LMS) உள்ளது.


கல்வியியல் முகாமைத்துவத்தில்


கல்வி ஒழுங்கமைப்பின் நிர்வாகத்தை மேம்படுத்த கல்வி முகாமைத்துவத் தகவல் தொகுதிகள் அபிவிருத்தி செய்தல் (EMIS). கற்றல் முகாமைத்துவத் தொகுதிகள். வந்துகொண்டிருக்கும் உட்புகுத்தப்பட்ட அநேக பாடநெறிகள் அவற்றின் பரீட்சைகளையும் (Online இலேயே) நடத்துகின்றது.

No comments:

Post a Comment